Wednesday, October 5, 2016

சேலம் கோட்டை மாரியம்மன் சிறப்புகள்

சேலம் கோட்டை மாரியம்மன் சிறப்புகள்..
சேலம் மாநகரில் "எட்டு பேட்டையை கட்டியாளும் கோட்டை மாரியம்மன்" என்ற சிறப்பை பெற்ற கோவில் கோட்டை மாரியம்மன் கோவில்.செவ்வாய்பேட்டை ,பொன்னம்மாபேட்டை ,குகை,அம்மாபேட்டை,சஞ்சீவிராயன்பேட்டை,கிச்சிபாளையம்,குமரசாம்பட்டி ஆகிய எட்டு பேட்டைகளையும் கட்டி ஆள்பவள் இவளே!!
இந்த திருக்கோவில் மணிமுத்தாறு நதிகரையில் அமைத்துள்ளது,கோட்டைமாரியம்மன் அக்னி திசையை நோக்கியவாறு வலது மேல்கரத்தில் நாகபாசமும் உடுக்கையும் கொண்டு, இடது மேல்கரத்தில் அங்குசமும் அமுத சின்னமும் கொண்டு வலது முன்கரத்தில் சூலமும் இடது முன்கரத்தில் கபாலமும் கொண்டு காட்சிதருகிறாள்..
ஆடி மாதத்தில் அம்மனுக்கு பூச்சாட்டலுடன் விழா தொடங்கி 22 நாட்கள் நடைபெறும். இங்கு அம்மனுக்கு பூச்சாட்டப்பட்ட பூ கொண்டே மற்ற அம்மன் கோவிலில் பூச்சாட்டல் நடைபெறுவது வழக்கம்..பண்டிகையின் போது கோட்டை பெருமாள் கோவிலில் இருந்து தங்கையான கோட்டை மாரியம்மனுக்கு சீர்வரிசை வருகிறது..

No comments:

Post a Comment

Like Us